ஓசூர் மாநகராட்சி பகுதியில், ஆக்கிரமிப்பில் உள்ள பூங்காக்கள் விரைவில் மீட்கப்படும்- மேயர் சத்யா தகவல்
- விரைவில் 4 மண்டல அலுவலகம் கட்டப்படும்.
- ஒசூரில் உள்ள பூங்காக்களை பராமரிக்கும் பணிகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும்.
ஒசூர்,
ஓசூர் மாநகராட்சியின் அவசர கூட்டம், மாமன்ற கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா தலைமை தாங்கினார்., ஆணையாளர் பாலசுப்பிரமணியன், துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மேயர் சத்யா பேசியதாவது:
"ஒசூர் மாநகராட்சிக்கு சொந்தமான 9 நடுநிலைப்பள்ளிகளில் ரூ.6.35 கோடி மதிப்பில் விரைவில் ஸ்மார்ட் வகுப்பறைகள் கட்டித் தரப்படும். ஒசூர் மாநகர சுகாதார அலுவலர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். ஓசூர் மாநகராட்சி 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த 4 மண்டலங்களுக்கும் மாநகராட்சி சார்பில் பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். விரைவில் 4 மண்டல அலுவலகம் கட்டப்படும்.
ஒசூர் மாநகராட்சியில் 387 பூங்காக்கள் உள்ளன. இந்த பூங்காக்கள் தனியார் துறை மூலம் பராமரிக்கப்படும். மேலும் சில பூங்காக்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதனை கண்டறிந்துள்ளோம்.
அவற்றை மீட்டு சுற்றுச்சுவர் அல்லது இரும்பு வேலி அமைத்து பாதுகாக்கப்படும். ஒசூரில் உள்ள பூங்காக்களை பராமரிக்கும் பணிகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும்.
ஹட்கோ நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் நிதியுதவியுடன் ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு மினி லாரி என 45 வார்டுகளில் குப்பைகளை சேகரிக்க மினி லாரி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . விரைவில் ஒசூரில் முக்கிய இடங்களில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்படும்" இவ்வாறு, கூட்டத்தில் சத்யா பேசினார்.
ஆணையாளர் பாலசுப்பிரமணியன் பேசுகையில், ஒசூர் மாநகராட்சி அலுவலகத்தில் அனைவரும் பயன்பெரும் வகையில் நூலகம் அமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் ஒசூர் மாநகராட்சியில்நூலகம் அமைக்கப்படும்.
ஒசூரில் 97 கிலோ மீட்டர் தொலைவிற்கு மண் சாலைகள் உள்ளன. ரூ.67 கோடி மதிப்பில் அவற்றை தார்ச்சாலை மற்றும் கான்கிரீட் சாலைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் ஒசூரில் உள்ள அனைத்துச் சாலைகளிலும் விரைவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். இதனால் ஒசூரில் திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் தடுக்கப்படும்.
ஓசூர் மாநகராட்சியில், வெளிப்படையான நிர்வாகம், சிறப்பான நிதிமேலாண்மை ஆகியவற்றால் வளர்ச்சித் திட்டப் பணிகள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இவ்வாறு ஆணையாளர் கூட்டத்தில் பேசினார்.
இதில், மாமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு, தங்கள் வார்டு பகுதி தேவைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து பேசினர்.
இக்கூட்டத்தில், மன்றத்தில் வைக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.