உள்ளூர் செய்திகள்

நடிகர் கனல் கண்ணன் கைதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினர் கைது

Published On 2022-08-16 08:37 GMT   |   Update On 2022-08-16 08:47 GMT
  • நடிகர் கனல் கண்ணன் கைதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.
  • எந்தவித போராட்டத்திற்கும் அனுமதி இல்லை என போலீசார் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

கடலூர்:

இந்து முன்னணி கலை இயக்கிய மாநில தலைவர் நடிகர் கனல் கண்ணன் கைது செய்த தமிழக அரசை கண்டித்து தமிழக முழுவதும் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். அதன்படி இன்று காலை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமையில் நிர்வாகிகள் திரண்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த கடலூர் போலீஸ் டி.எஸ்.பி. கரிகால் பாரிசங்கர் தலைமையில் போலீசார் இந்து முன்னணி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அனுமதி இல்லாமல் எந்தவித போராட்டத்திற்கும் அனுமதி இல்லை என போலீசார் திட்டவட்டமாக தெரிவித்தனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட வந்திருந்த இந்து முன்னணி கலைந்து செல்லாததால் போலீசார் 20 பேரை கைது செய்து கடலூர் தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் கண்டன கோஷம் எழுப்பி சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News