உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே மின்சாரம் தாக்கி மளிகை கடை ஊழியர் சாவு

Published On 2022-08-19 08:14 GMT   |   Update On 2022-08-19 08:14 GMT
  • பண்ருட்டி அருகே மின்சாரம் தாக்கி மளிகை கடை ஊழியர் பலியானார்.
  • மழை பெய்து கொண்டிருந்ததால் தரையில் தண்ணீர் தேங்கி தரை வழுக்கியுள்ளது.

கடலூர்:

சென்னையை சேர்ந்தவர் மோசஸ் (வயது 18) இவருக்க தாய், தந்தை இல்லை. எனவே இவர் பண்ருட்டி அருகே கணிசப்பாக்கம் காலனியிலுள்ள தாய் மாமன் தரணிதரன் என்பவரது வீட்டில் தங்கி இருந்து பண்ருட்டி ரத்தினம்பிள்ளை காய்கனி மார்க்கெட்டிலுள்ள மளிகை கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். வழக்கம் போல கடைக்கு வேலைக்கு செல்வதற்காக இன்று காலை வீட்டின் பின்புறம் உள்ள பாத்ரூமில்குளித்துவிட்டு வந்துள்ளார். அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் தரையில் தண்ணீர் தேங்கி தரை வழுக்கியுள்ளது. அப்போது கீழே விழாமல் இருக்க அருகில் இருந்த மின் கம்பத்தின் எர்த் கம்பியை பிடித்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கியதில் மோசஸ் பரிதாபமாக உயிரிந்தார். இது பற்றிதகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் ஏட்டு வேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்குவிரைந்து சென்று மின்சாரம்தாக்கி உயிர் இழந்த மோசஸ் உடலை கைப்பற்றி பண்ருட்டி அரசுஆஸ்பத்திரிக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

Tags:    

Similar News