உள்ளூர் செய்திகள்

மகன் இறந்த துயரத்தில் தற்கொலை செய்து கொண்ட தாய்

Published On 2022-07-19 15:28 IST   |   Update On 2022-07-19 15:28:00 IST
  • மகன் தமிழரசன் என்பவர் சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
  • மகன் இறந்த துக்கத்தில் தூக்குபோட்டு தாயம்மாள் உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அருகே அஞ்செட்டி போலீஸ் சரகம் வண்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி தாயம்மாள்.

இவர்களது மகன் தமிழரசன் என்பவர் சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அப்போதிலிருந்தே தாயம்மாள் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

கடந்த 17-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத பொது தாயம்மாள் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தாயம்மாள் உயிரிழந்தார்.

இது குறித்து அஞ்செட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News