உள்ளூர் செய்திகள்

கலெக்டர் தீபக்ஜேக்கப்.

தஞ்சையில், நாளை முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம்

Published On 2023-07-17 15:19 IST   |   Update On 2023-07-17 15:19:00 IST
  • நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
  • முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம்.

தஞ்சாவூர்:

முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நாளை ( செவ்வாய்க்கிழமை ) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

முன்னாள் படை வீரர்கள், சார்ந்தோர்கள் 2 பிரதிகளில் மனுக்களை தங்கள் அடையாள அட்டையுடன் இணைந்து சமர்ப்பிக்க வேண்டும்.

எனவே கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம்.

மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் தீப க்ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News