என் மலர்
நீங்கள் தேடியது "Veterans"
- நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
- முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம்.
தஞ்சாவூர்:
முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நாளை ( செவ்வாய்க்கிழமை ) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
முன்னாள் படை வீரர்கள், சார்ந்தோர்கள் 2 பிரதிகளில் மனுக்களை தங்கள் அடையாள அட்டையுடன் இணைந்து சமர்ப்பிக்க வேண்டும்.
எனவே கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம்.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் தீப க்ஜேக்கப் தெரிவித்துள்ளார்.






