உள்ளூர் செய்திகள்

மரக்கன்று நட்டு விழிப்புணர்வு பேரணி. 

வேதாரண்யம் குருகுல பெண்கள் பள்ளியில் பசுமை உறுதிமொழி ஏற்பு

Published On 2022-07-14 09:08 GMT   |   Update On 2022-07-14 09:08 GMT
  • “மரக்கன்று நடுதல் பணியில் வனத்துறையின் பங்கு” என்ற தலைப்பில் பேசினார்.
  • தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன்தலைமை வகித்து மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்கினார்.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவ ட்டம் வேதாரண்யம் கஸ்தூரிபா காந்தி குருகுல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வன மகோத்சவம் வார நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலாவதாக பசுமை உறுதிமொழி எடுக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன்த லைமை வகித்து மாணவி களுக்கு மஞ்சப்பை வழங்கி னார். கோடியக்கரை வனவர் பெரியசாமி "மரக்கன்று நடுதல் பணியில் வனத்துறையின் பங்கு" என்ற தலைப்பில் பேசினார். சிறப்பு விருந்தினராக லண்டன் வாழ் தமிழர் புஷ்பா ராமானுஜம் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கலந்து கொண்டார். உதவி தலைமை ஆசிரியை கற்பக சுந்தரி வன மகோத்சவம் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார், முன்னதாக தேசிய பசுமை படை இணை ஒருங்கிணைப்பாளர் சாந்தினி வரவேற்புரை நிகழ்த்தினார்.

ஒருங்கிணை ப்பாளர் கற்பகவல்லி நன்றியுரையா ற்றினார். இறுதியாக பள்ளி வளாக த்தில் மரக்கன்றுகள் நடப்ப ட்டன.

Tags:    

Similar News