உள்ளூர் செய்திகள்

கல்லூரி முதல்வர் ராஜாவரதராஜா.

அரசு கல்லூரி முதல்வர் பொறுப்பேற்பு

Published On 2022-06-25 10:40 GMT   |   Update On 2022-06-25 10:40 GMT
  • திருக்காட்டுப்பள்ளியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிதாக தொடங்குவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
  • எனவே, மாணவ-மாணவிகள் வருகிற ஜூலை 7-க்குள் இணைய வழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு முதல்வர் ராஜா வரதராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

பூதலூர்:

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிதாக தொடங்குவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதன்படி, புதிய கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை இணைய வழியில் தொடங்க ப்பட்டுள்ளது. தற்காலிகமாக பூதலூர் கூட்டுறவு காலனி பகுதியில் உள்ள பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கல்லூரி வகுப்புகள் தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புதிய கலை அறிவியல் கல்லூரியில் முதல்வராக தஞ்சை மன்னர் அரசு சரபோஜி கல்லூரியில் தமிழ் துறைதலைவராக பணியாற்றி வரும் பேராசிரியர் டாக்டர் ராஜாவரதராஜா நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொ ண்டார்.

புதிதாக தொடங்க வுள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடப்பாண்டு பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.காம், பி.பி.ஏ, பி.எஸ்.சி கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் வகுப்புகள் தொடங்க உள்ளது. எனவே, மாணவ-மாணவிகள் வருகிற ஜூலை 7-க்குள் இணைய வழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு முதல்வர் ராஜா வரதராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News