உள்ளூர் செய்திகள்

வேலைக்கு போகாமல் ஊர் சுற்றியதை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை

Published On 2022-07-25 15:00 IST   |   Update On 2022-07-25 15:00:00 IST
  • கடந்த சில மாதங்களாக வேலை எதற்கும் செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.
  • இதை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேயுள்ள பாகனூர் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது30). இவர் கடந்த சில மாதங்களாக வேலை எதற்கும் செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.

இதை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதில் மனமுடைந்த மகேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News