உள்ளூர் செய்திகள்

செங்கோட்டையில் வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு

Published On 2023-04-02 09:07 GMT   |   Update On 2023-04-02 09:10 GMT

செங்கோட்டை:

செங்கோட்டை ராமசாமி தெருவை சேர்ந்தவர் பலவேசம். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 57). இவர் சம்பவத்தன்று அதிகாலை 4 மணி அளவில் காற்றுக்காக வீட்டு கதவை திறந்து வைத்து விட்டு வீட்டிற்குள் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது மர்ம நபர் வீட்டில் உள்ளே நுழைந்து மகேஸ்வரி கழுத்தில் இருந்த தாலியை பிடித்து இழுக்கவும் திடீர் என்று விழித்துக்கொண்ட மகேஸ்வரி திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டார்.

சுதாரித்து கொண்ட மர்ம நபர் மஞ்சள் கயிற்றில் கோர்க்கப்பட்டு இருந்த 4 கிராம் நகையை மட்டும் அறுத்து கொண்டு காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து செங்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் சரசையன் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபரை தேடிவருகிறார்.

Tags:    

Similar News