உள்ளூர் செய்திகள்

போச்சம்பள்ளி அருகே சிறுமி மாயம்

Published On 2022-07-19 15:30 IST   |   Update On 2022-07-19 15:30:00 IST
  • 17 வயது மகள் பிளஸ்-2 படித்துவிட்டு வீட்டிலேயே இருந்து வந்தார்.
  • கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றார். பின்னர் திரும்பவில்லை.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேயுள்ள போதனூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது 17 வயது மகள் பிளஸ்-2 படித்துவிட்டு வீட்டிலேயே இருந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 12-ந்தேதி கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசில் சரவணன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News