உள்ளூர் செய்திகள்

கோவை அருகே கஞ்சா போதையில் மோதி கொண்ட வாலிபர்கள்

Published On 2023-10-08 08:45 GMT   |   Update On 2023-10-08 08:45 GMT
  • கல்வீசி தாக்கியதில் 5 வாகனங்கள் சேதம்
  • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை

கோவை,

கோவை சின்னவேடம்பட்டி அருகே அஞ்சுகம் நகர் உள்ளது. இங்கு ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு இங்கு 5-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் நின்றிருந்தனர். அவர்கள் அனைவரும் அங்கு ஒரத்தில், அமர்ந்து கஞ்சா புகைத்துள்ளனர்.

பின்னர் போதை தலைக்கேறிய நிலையில், குடியிருப்பு பகுதிக்குள் வந்த வாலிபர்கள் திடீரென அதிக சத்தம் எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். வாக்குவாதம் முற்றவே வாலிபர்கள் ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். மேலும் அங்கு கிடந்த கற்களை எடுத்தும், ஒருவர் மீது ஒருவர் வீசினர்.

தொடர்ந்து அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார், மோட்டார் சைக்கிள்கள் மீதும் கற்களை தூக்கி வீசியதில், 5 வாகனங்கள் சேதம் அடைந்தன.இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

இந்த பகுதியில் இளைஞர்கள் கஞ்சா போதையில் அடிக்கடி சண்டையிட்டு வருகின்றனர். இதனால் இங்கு ஒருவித அச்சத்துடனேயே இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் கஞ்சா விற்பனையை தடுத்து, இதுபோன்ற இளைஞர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

Tags:    

Similar News