உள்ளூர் செய்திகள்

கடலூரில் அண்ணன்- தம்பியை தாக்கிய கும்பல்போலீசார் தீவிர விசாரணை

Published On 2023-03-30 15:04 IST   |   Update On 2023-03-30 16:05:00 IST
  • ராம்குமார் (வயது 32). சம்ப வத்தன்று ராம்குமார் தனது பாட்டி வேதவள்ளி இறந்து விட்டதை தொடர்ந்து அடக்கம் செய்து விட்டு தனது உறவிர்களுடன் நடந்து வந்து கொண்டி ருந்தார்.
  • இதில் காயம் அடைந்த ராம்குமார் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடலூர்:

கடலூர் வழிசோதனை பாளையம் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 32). சம்ப வத்தன்று ராம்குமார் தனது பாட்டி வேதவள்ளி இறந்து விட்டதை தொடர்ந்து அடக்கம் செய்து விட்டு தனது உறவினர்களுடன் நடந்து வந்து கொண்டி ருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 3 பேர் குடி போதையில் திடீரென்று ராம்குமார் மற்றும் அவரது சகோதரர் கண்ணன் ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த ராம்குமார் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் அதே பகுதியை சேர்ந்த புஷ்பராஜ், கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ண ராஜ் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News