உள்ளூர் செய்திகள்

குடும்பம் நடத்த வராத மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவன் கைது

Published On 2022-07-21 14:57 IST   |   Update On 2022-07-21 14:57:00 IST
  • மீண்டும் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார்.
  • ஆத்திரமடைந்த ஜனார்த்தனன் தன்னுடன் வரவில்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி தாக்க முற்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகேயுள்ள ஆலமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது36). இவரது மனைவி சுகன்யா (31).

இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் சுகன்யா கோபித்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

மனைவியின் தாய் வீட்டுக்கு சென்ற ஜனார்த்தனன் மீண்டும் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அதற்கு சுகன்யா மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜனார்த்தனன் தன்னுடன் வரவில்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி தாக்க முற்பட்டுள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் திரண்டதால் அங்கிருந்து ஜனார்த்தனன் தப்பி சென்று விட்டார்.

இது குறித்து சுகன்யா கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜனார்தனனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News