சேலம் மார்க்கெட்டுகளில் பூக்கள் விலை உயர்வு
- புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையான இன்று சேலம் பூ மார்க்கெட்டில் பூக்கள் வாங்க பொது மக்கள் அதிக அளவில் குவிந்தனர்.
- இதனால் பூக்கள் விலை இன்று உயர்ந்தது.
சேலம்:
சேலம் மார்க்கெட்டு களுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
இந்த நிலையில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையான இன்று சேலம் பூ மார்க்கெட்டில் பூக்கள் வாங்க பொது மக்கள் அதிக அளவில் குவிந்தனர். இதனால் பூக்கள் விலை இன்று உயர்ந்தது. நேற்று சேலம் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி ரூ.320-க்கு விற்பனையானது. முல்லை ரூ. 240, ஜாதி மல்லி, ரூ. 260, காக்காட்டான் ரூ.160, கலர் காக்காட்டான்
ரூ. 120, அரளி ரூ. 100, வெள்ளைஅரளி ரூ. 100, மஞ்சள் அரளி ரூ. 100, செவ்வரளி ரூ. 120, நந்தியாவட்டம் ரூ. 60, சம்பங்கி ரூ. 80, சாதா சம்பங்கி ரூ. 80 க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் இன்று பூக்கள் விலை மீண்டும் உயர்ந்தது. அதன்படி சேலம் மார்க்கெட்ககளில் மல்லிகைபூ ஒரு கிலோ இன்று 500 ரூபாக்கு விற்பனையானது. முல்லை 360, ஜாதி மல்லி 260, காக்காட்டான் 200, கல்ர் காக்காட்டான் 160, அரளி 120, செவ்வரளி 140, நந்தியாவட்டம் 60, சம்பங்கி 120 ரூபாய்க்கும் விற்பனையாது. ஆனாலும் பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் பூக்களை அதிக அளவில் வாங்கி சென்றனர்.