உள்ளூர் செய்திகள்

அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோவிலில் கொடியேற்றம் நடந்தது.

அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோவிலில் கொடியேற்றம்

Published On 2022-09-01 15:03 IST   |   Update On 2022-09-01 15:03:00 IST
  • வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பின்பு கோவிலில் உள்ள கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.
  • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தோப்புதுறையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அபிஷ்ட வரதராஜபெருமாள் கோவில் உள்ளது.

இந்த ஆலயத்தில் ஆண்டு திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் துவங்கியது.

முன்னதாக வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பின்பு கோவிலில் உள்ள கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது .

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வரதராஜ பெருமாளை வழிபட்டனர். 10 நாட்கள் நடைபெறும் இந்த ஆண்டு திருவிழா நாள்தோறும் சாமி வீதியுலா காட்சியும் திங்கட்கிழமை திருகல்யாணமும்நடைபெறுகிறது.

Tags:    

Similar News