உள்ளூர் செய்திகள்

மத்தி மீன்களை வெளிமாநிலங்களுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்ட மீனவர்கள்.

அதிகளவில் மத்தி மீன்கள் கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி

Published On 2022-08-07 09:38 GMT   |   Update On 2022-08-07 09:38 GMT
  • குறைந்த தூரத்திற்கு பைபர் படகில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் வலையில் டன் கணக்கில் மத்தி மீன்கள் சிக்கியது.
  • சுமார் 5 டன் மீன்களும் கிலோ ரூ. 190-க்கு ஏலம் போனது.

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுக்கா ஆறுகாட்டுதுறையில் 400-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் 58 விசைப்படகுகள் உள்ளன.கடந்த மூன்று நாட்களாக கடலின் உள்பகுதியில் சுழல் காற்று வீசுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

இதனால் குறைந்த தூரத்திற்கு பைபர் படகில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் வலையில் டன் கணக்கில் மத்தி மீன்கள் சிக்கியது. இதையடுத்து கரை திரும்பிய மீனவர்கள் மத்தி மீன்களை கேரளா, சென்னை, திருச்சி ,பெங்களூர் உள்ளிட்ட இடங்களுக்கு ஏற்றுமதி செய்தனர். வழக்கமாக மத்தி மீன்கள் 40 முதல் 120 வரையில் விலை போகும். ஆனால் சுமார் 5 டன் மீன்களும் கிலோ ரூ.190- க்கு ஏலம் போனது. அதிக அளவில் மத்தி மீன்கள் கிடைத்தாலும் அதற்கு நல்ல விலை கிடைத்ததாலும் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News