உள்ளூர் செய்திகள்

சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.

விவசாயிகள் சாலை மறியல்

Published On 2022-06-24 09:58 GMT   |   Update On 2022-06-24 09:58 GMT
  • சாகுபடி செய்யப்பட்ட பருத்தியை திருப்பனந்தாள் அருகே கட்டா நகரம் பருத்தி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொள்முதல் செய்ய விவசாயிகள் காத்திருந்தனர்.
  • விவசாயிகள் அனைவரும் ஒன்று திரண்டு ஆடுதுறை-திருப்பனந்தாள் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம்:

திருவிடைமருதூர் வட்டத்துக்கு உட்பட்ட திருப்பனந்தாளில் தமிழக அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.

இங்கு விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்து வாரத்தில் வியாழக்கிழமை கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோட்டில் உள்ள பஞ்சு மில் தனியார் வியாபாரிகள் வந்து மறைமுக விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்வது வழக்கம்.தற்போது டெல்டா மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது .

சாகுபடி செய்யப்பட்ட பருத்தியை திருப்பனந்தாள் அருகே கட்டா நகரம் பருத்தி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் கொள்முதல் செய்ய விவசாயிகள் காத்திருந்தனர்.இந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 500 குவிண்டால்கள் பருத்தி கொண்டு வந்தனர்.

இதில் பல விவசாயிகளின் பருத்திக்கு சரியான விலை நிர்ணயம் செய்யவில்லை என்று புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து விவசாயிகள் அனைவரும் ஒன்று திரண்டு ஆடுதுறை திருப்பனந்தாள் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட் வர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உரிய அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News