உள்ளூர் செய்திகள்

விவசாய சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மணல் குவாரிகளை மூட வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் சாலை மறியல்

Published On 2022-07-20 10:53 GMT   |   Update On 2022-07-20 10:53 GMT
  • நிலத்தடி நீர் உப்பு நீராக மாறி வருவதாகவும், விவ–சாய விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு வருவதாக புகார் கூறப்பட்டது.
  • தார் பிளாண்டு இயங்குவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு பொதுமக்களுக்கு நோய் தொற்று உருவாகும் அபாய நிலை உள்ளது.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் மருதம்பள்ளம், கிடங்கல், மேலப்பெரும்பள்ளம் சித்தாம்பாடி உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட பகுதி–களில் மணல் குவாரிகள் இயங்கி வருகிறது.

இதனால் சுற்றி உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாகவும், நிலத்தடி நீர் உப்பு நீராக மாறி வருவதாகவும், விவ–சாய விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு வருவதாக புகார் கூறப்பட்டது.

இந்த குவாரிகளை மூட வலியுறுத்தியும், மேலும் இப்பகுதியில் தார் பிளாண்டு இயங்குவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு பொதுமக்களுக்கு நோய் தொற்று உருவாகும் அபாய நிலை உள்ளதால் உடனடியாக அவற்றை மூட வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடை–பெற்றதுவிவசாய சங்க ஒன்றிய செயலாளர் சண்மு–கம் தலைமையில் நடை–பெற்ற சாலை மறியல் போராட்டத்தில் மாவட்ட செயலாளர் துரைராஜ், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சரவணன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் கருணாநிதி, முனுசாமி உள்ளிட்ட விவசாய சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த செம்பனா ர்கோயில் இன்ஸ்பெ க்டர் செல்வி, தரங்கம்பாடி தாசில்தார் புனிதா மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு–வார்த்தை நடத்தி னர். பேச்சுவா ர்த்தையில் தாசில்தார் விதிமுறைக–ளுக்கு எதிராக செய ல்படும் குவாரிகளை மூட நடவ–டிக்கை எடுத்ததால் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் சாலை மறியல் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சீர்காழிநா கப்பட்டினம் தேசிய நெடுஞ்சா லையில் ஒரு போக்கு வரத்து பாதிக் கப்பட்டது.

Tags:    

Similar News