உள்ளூர் செய்திகள்

பாளை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி

Published On 2023-08-23 14:32 IST   |   Update On 2023-08-23 14:32:00 IST
  • முத்துகிருஷ்ணன் தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
  • தாமரைசெல்வி அருகே வந்த போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியது.

நெல்லை:

பாளை ரெட்டியார்பட்டியை அடுத்த இட்டேரி அருகே உள்ள உன்னங்குளம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் மாசானமுத்து (வயது65). விவசாயி. இவரது மகன் முத்துகிருஷ்ணன் (29). இவர் சென்னையில் வேலை பார்த்து வருகிறார்.

தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று மாலை அவரை சென்னைக்கு அனுப்பி வைக்க சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு தந்தை-மகன் இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்தனர். இட்டேரி அடுத்த தாமரைசெல்வி அருகே வந்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியதில் பின்னால் அமர்ந்திருந்த மாசானமுத்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.

அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாசானமுத்து இறந்தார். இது குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News