உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை

Published On 2023-07-16 14:25 IST   |   Update On 2023-07-16 14:25:00 IST
  • பண்ருட்டி அருகே பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
  • வீரமுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கடலூர்:

பண்ருட்டி அடுத்த பைத்தம்பாடி மேல்காவனூரை சேர்ந்தவர் வீரமுத்து (வயது 45). இவர் வயலுக்கு அடிப்பதற்கு வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து உள்ளார். இதனால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த தகவலின் பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News