உள்ளூர் செய்திகள்

குடும்ப தகராறு- கணவன் தூக்கிட்டு தற்கொலை

Published On 2023-06-17 12:38 IST   |   Update On 2023-06-17 16:03:00 IST
  • கடந்த 12-ந் தேதி சண்டையில் கோபித்துக்கொண்டு ரிஸ்வானா தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
  • திருவள்ளூர் போலீசார் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் முகமது அலி தெருவைச் சேர்ந்தவர் ஷாயின்ஷா (29). இவருக்கு திருமணமாகி ரிஸ்வானா என்ற மனைவி ஒரு வயது பெண் குழந்தையும் உள்ளது.

கடந்த 12-ந் தேதி சண்டையில் கோபித்துக்கொண்டு ரிஸ்வானா தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அழைத்தும் அவர் வராததால் விரக்தி அடைந்த ஷாயின்ஷா புடவையால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர் டவுன் போலீசார் தந்தை அமீத்பாஷா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News