கிணத்துக்கடவில் பால்வியாபாரியிடம் நூதன முறையில் பணம் பறிப்பு
- ரூ.68 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டார்.
- தன்னுடைய பாக்கெட்டில் இருந்து 20 ரூபாய் பணத்தை எடுத்து கீழே போட்டார்.
கிணத்துக்கடவு
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சங்கராபுரம் புதூரை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 65). பால் வியாபாரி.
சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள வங்கிக்கு சென்றார். பின்னர் ரூ.68 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டார். செல்லும் வழியில் பழைய சோதனை சாவடி அருகே எண்ணை வாங்குவதற்காக மொபட்டை நிறுத்தினார்.
அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் தன்னுடைய பாக்கெட்டில் இருந்து 20 ரூபாய் பணத்தை எடுத்து கீழே போட்டார். பின்னர் பொன்னுசாமியிடம் உங்களுடைய பணம் கீழே விழுந்து கிடப்பதாக கூறினார். அதனை அவர் எடுக்க முயன்ற போது அந்த மர்மநபர் பொன்னுசாமி ரூ.68 ஆயிரம் பணத்தை வைத்து இருந்த கைப்பையை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார்.
இதில் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பால் வியாபாரியை நூதன முறையில் ஏமாற்றி பணத்தை பறித்து சென்ற வாலிபரை தேடி வருகிறார்கள்.