உள்ளூர் செய்திகள்
பெருந்துறையில் மாயமான இளம்பெண் குறித்து இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
பெருந்துறை:
பெருந்துறை தோப்புப்பாளையம் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி தனது மனைவி மற்றும் 2 மகன் ஒரு மகளுடன் அதே பகுதியில் குடியிருந்து வருகிறார். அவரது 17 வயது இளைய மகள் சம்பவத்தன்று காலை பெருந்துறையில் உள்ள ஒரு நகை கடையில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.
மாலை அவர் வீடு திரும்பாததால் அக்கம்பக்கத்தினர் மற்றும் கடைவீதி பகுதியில் தேடிப் பார்த்தும் அந்த இளம்பெண்ணை காணவில்லை.
இது குறித்து பெருந்துறை போலீஸ் நிலையத்தில் அவரது தந்தை புகார் அளித்தார். புகாரின் பேரில் பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.