உள்ளூர் செய்திகள்

குடும்ப தகராறில் பெண் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2023-11-10 08:00 GMT   |   Update On 2023-11-10 08:00 GMT
  • தூக்கிட்ட நிலையில் சாந்தி தொங்கியவாறு இருந்துள்ளார்.
  • ஈரோடு தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு சாஸ்திரி நகர், வாய்க்கால் மேடு, குமரன் நகரை சேர்ந்தவர் சரவணன் (44). இவரது மனைவி சாந்தி (33). உறவினர்களான இருவருக்கும் கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சாந்தி ஈரோட்டில் உள்ள பிரபல துணிக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். சரவணன் சரி வர வேலை க்கு செல்லாமல், வீட்டை கவனிக்காமல் இருந்து வந்துள்ளார்.

இதனால் குடும்பம் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டு வந்துள்ளது. அதனால் சமீப காலமாக சாந்தி மன அழுத்தத்துடன் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை சாந்தியின் மகன் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்துள்ளது.

வெகு நேரம் கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது பேன் மாட்டும் கொக்கியில் தூக்கிட்ட நிலையில் சாந்தி தொங்கியவாறு இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே சாந்தி இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து ஈரோடு தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News