அந்தியூர் பேரூராட்சியில் மஞ்சள்பை விழிப்புணர்வு பேரணி
- அந்தியூர் பேரூராட்சியில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்வது மற்றும் மஞ்சள் பையை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- இப்பேரணியானது அந்தியூர், பர்கூர் சாலை, பஸ் நிலையம், அத்தாணி சாலை, சிங்கார வீதி, தேர் வீதி வழியாக மீண்டும் அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தில் வந்து நிறைவடைந்தது.
அந்தியூர்:
அந்தியூர் பேரூராட்சியில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்வது மற்றும் மஞ்சள் பையை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
அந்தியூர் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார் தலைமையில், பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் மாதேஷ், துணைத்தலைவர் பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் பேரணி கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.
இப்பேரணியானது அந்தியூர், பர்கூர் சாலை, பஸ் நிலையம், அத்தாணி சாலை, சிங்கார வீதி, தேர் வீதி வழியாக மீண்டும் அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தில் வந்து நிறைவடைந்தது.
இந்நிகழ்ச்சியில் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் திருமாவளவன், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் குணசேகரன், துப்புரவு மேற்பார்வையாளர் ஈஸ்வரமூர்த்தி, சாந்து முகமது, கவுன்சிலர்கள், அலுவலகப்பணியாளர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் த.பா.கோவிந்தராஜ், அல்ட்ரா தொண்டு நிறுவனர் தண்டாயு தபாணி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.