உள்ளூர் செய்திகள்

கீழே விழும் நிலையில் உள்ள மரத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

Published On 2022-12-01 09:43 GMT   |   Update On 2022-12-01 09:43 GMT
  • ஈங்கூர் ரோட்டில் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு பெரிய மரம் ஒன்று உள்ளது.
  • மரத்தின் அடிப்பகுதி தாங்க முடியாமல் எந்த நேரமும் ஒடிந்து விழும் நிலையில் உள்ளது.

சென்னிமலை:

சென்னிமலையில் அதிக போக்குவரத்து உள்ள ரோடு ஈங்கூர் ரோடு ஆகும்.

இந்த ரோட்டில் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு பெரிய மரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தின் அடிப்பகுதியில் மிகப் பெரிய அளவில் துவாரம் ஏற்பட்டதால் மரத்தின் அடிப்பகுதி வலுவிழந்தது.

இதனால் மரத்தின் ஒரு கிளை ஒடிந்து ரோட்டில் விழுந்தது. நல்ல வேளையாக அப்போது யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

தற்போது அந்த மரத்தின் கிளைகள் அதிக அளவில் பரவி உள்ளதால் மரத்தின் அடிப்பகுதி தாங்க முடியாமல் எந்த நேரமும் ஒடிந்து விழும் நிலையில் உள்ளது.

இது குறித்து அந்த மரத்தை அகற்ற பொது மக்கள் நெடுஞ்சாலை துறையினரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.  

Tags:    

Similar News