உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி

Published On 2022-07-11 09:23 GMT   |   Update On 2022-07-11 09:23 GMT
  • கோபிசெட்டிபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலியானார்.
  • இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோபி:

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கணபதி பாளையம் பகுதியை சேர்ந்தவர் அங்கம்மாள் (வயது 68). இவர் ஈரோடு சத்தியமங்கலம் ரோடு கணபதிபாளையம் பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக கிரே நகர் பகுதியை சேர்ந்த மனோஜ்குமார் மோட்டார் சைக்கிளில் வந்தார். மோட்டார் சைக்கிள் பின் பகுதியில் ரோகினி (25) என்பவர் அமர்ந்திருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத வித மாக அங்கம்மாள் மீது மோதியது. இதில் அங்க ம்மாள் மற்றும் ரோகினி ஆகியோர் படுகாயம் அடைந்தார்.

இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழி யிலேயே அங்கம்மாள் பரிதாபமாக இறந்தார். ரோகினி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News