உள்ளூர் செய்திகள்

ஈரோட்டில் மார்க்கெட்டில் மீன்கள் வரத்து அதிகரிப்பு

Published On 2022-10-16 10:49 GMT   |   Update On 2022-10-16 10:49 GMT
  • இன்று ஈரோட்டில் மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது.
  • புரட்டாசி மாதம் முடிவடைய உள்ளதால் இன்று முதல் மீண்டும் மீன்கள் வரத்து அதிகரித்து ள்ளன.

ஈரோடு:

புரட்டாசி மாதத்தில் அசைவ பிரியர்களில பெரும்பாலானோர் சைவத்துக்கு மாறி ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டு வந்தனர்.இதனால் மீன், இறைச்சி கடைகளில் வியாபாரம் மந்தமாக இருந்தது.

மாறாக காய்கறிகளின் தேவை அதிகரித்து காய்கறிகள் விலையும் அதிகரித்தது. இந்நிலையில் புரட்டாசி மாதத்தில் வரும் 4 சனிக்கிழமை நேற்றுடன் முடிவடைந்தது.

இந்நிலையில் ஞாயிற்று க்கிழமை விடுமுறை நாளான இன்று ஈரோட்டில் மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது. ஈரோடு ஸ்டோனி பாலம் அருகே உள்ள மீன் மார்க்கெட்டில் 30-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன.

கடந்த சில நாட்களாக இங்கு வியாபாரம் மந்த நிலையில் நடைபெற்றது. இந்நிலையில் இன்று அதிகாலை முதலே பொது மக்கள் அதிக அளவில் வந்து மீன்களை வாங்கி சென்றனர். குறிப்பாக புரட்டாசி மாதம் என்பதால் கடந்த சில நாட்களாக 5 டன்கள் மட்டுமே மீன்கள் விற்பனைக்கு வந்தன.

ஆனால் தற்போது புரட்டாசி மாதம் முடிவ டைய உள்ளதால் இன்று முதல் மீண்டும் மீன்கள் வரத்து அதிகரித்து ள்ளன. இன்று மார்க்கெ ட்டில் 10 டன் மீன்கள் வரத்தாகி இருந்தன.

மக்கள் மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். இதன் காரண மாக கடந்த வாரத்தை விட இந்த வாரத்தில் ரூ.50 மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டன.

மார்க்கெட்டில் இன்று விற்கப்பட்ட மீன்களின் விலை கிலோவில் வருமாறு:

வஞ்சரம்-700, ப்ளூநண்டு-600, ராட்டு-650, சின்னராட்டு-500, கடல்பாறை-450, உளி-350, அயிலை-250, சங்கரா-350, திருக்கை-350, பால்சுறா-500, சீலா- 400, மத்தி-180, கருப்புவாவல்-500.

Tags:    

Similar News