உள்ளூர் செய்திகள்

பெண் தூக்கிட்டு தற்கொலை

Published On 2023-01-01 15:08 IST   |   Update On 2023-01-01 15:08:00 IST
  • மாது வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே உள்ள தாண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (40). இவரது மனைவி மாது (37). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கடந்த 6 வருடங்களாக மாதுவுக்கு வயிற்று வலி இருந்து வந்துள்ளது. அதற்காக நாட்டு வைத்தியம் பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று வழக்கம்போல குமார் வேலைக்கு சென்று விட்டார்.

மதியம் அவரது மகன் செல்போன் மூலமாக அவரை தொடர்பு கொண்டு, தாயார் மாது, வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார்.

உடனடியாக குமார் வீட்டுக்கு சென்று அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மாதுவை மீட்டு பார்த்துள்ளார். ஆனால், அவர் இறந்துவிட்டார்.

இதுகுறித்து, கணவர் குமார் அளித்த புகாரின் பேரில் சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News