உள்ளூர் செய்திகள்

கொரோனா இல்லாத மாவட்டமாக மாறிய ஈரோடு

Published On 2022-12-07 14:58 IST   |   Update On 2022-12-07 14:58:00 IST
  • கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவரும் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்.
  • இதனால் ஈரோடு மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா தினசரி பாதிப்பு அதிக அளவில் இருந்தது. பின்னர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவ டிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாக கொரோனா தாக்கம் குறைய தொடங்கியது.

கடந்த சில மாதங்க ளாகவே கொரோனா தினசரி தாக்கம் குறைய தொடங்கியது. இந்நிலையில் கடந்த 2 வாரமாக கொரோனா தினசரி பாதிப்பு ஒற்றை இலக்கில் பதிவாகி வருகிறது.

கடந்த 7 நாட்களாக மாவட்டத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் அதே சமயம் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர்.

நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியல் படி 8-வது நாளாக யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 646 ஆக உள்ளது.

கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவரும் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார். இதனால் ஈரோடு மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது.

இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 911 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மாவட்டத்தில் 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

Tags:    

Similar News