உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை

Published On 2023-08-23 07:54 GMT   |   Update On 2023-08-23 07:54 GMT
  • படுக்கையறை மின்விசிறியில் சவுபர்ணிகா தூக்கில் தொங்கியுள்ளார்.
  • சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னிமலை:

ஈரோடு மாவட்டம் சென்னிமலை மேற்கு ராஜ வீதியை சேர்ந்தவர் மனோகரன் (59). இவரது மனைவி அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இதில் மூத்த மகள் நெல்லையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூ ரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இளைய மகள் சவுபர்ணிகா (18) கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். தற்போது விடுமுறை என்பதால் வீட்டுக்கு வந்திருந்தார்.

இந்நிலையில் சவுபர்ணிகாவுக்கு பொறியியல் படிக்க சிரமமாக இருப்பதாகவும், அதனால் கலை கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்பு வதாகவும் கூறியுள்ளார்.

அதற்கு தந்தை மனோகரனும் சம்மதித்ததாக தெரிகிறது.இந்த நிலையில் விடுமுறை முடிந்து கல்லூரி செல்வதற்காக பை வாங்கி வருவதற்காக மனோகரன் காலையில் ஈரோடு சென்று விட்டார். அவரது மனைவியும் பள்ளிக்கு சென்று விட்டார்.

ஈரோடு சென்ற மனோகரன் மீ ண்டும் மதியம் 1.30 மணியளவில் வீட்டுக்கு வந்தபோது கதவு உள்பக்க மாக தாழிடப்பட்டிருந்துள்ளது. மகளை சத்தமிட்டு கூப்பிட்டும் வெகு நேரமாக கதவு திறக்கவில்லை.

இதையத்து அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது படுக்கையறை மின்விசிறியில் சவுபர்ணிகா தூக்கில் தொங்கியுள்ளார்.

உடனடியாக அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலே யே சவுபர்ணிகா இறந்து விட்டதாக கூறினார்.

இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News