உள்ளூர் செய்திகள்

ஜவுளிக்கடை பூட்டை உடைத்து பணம் கொள்ளை

Published On 2022-08-02 09:57 GMT   |   Update On 2022-08-02 09:57 GMT
  • கடை யின் பூட்டு உடை க்கப்ப ட்டு இருப்ப தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
  • லாக்கரில் இருந்த ரூ.15 ஆயிரம் பணம் திருட்டுப் போய் இருந்தது தெரிய வந்தது.

ஈரோடு:

ஈரோடு வீரப்பன்சத்திரம் அடுத்த கொத்துக்காரர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் (33). இவர் அதே பகுதியில் கடந்த ஒரு வருடமாக ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

இவர் தினமும் காலை கடையை திறந்து இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு சென்று விடுவது வழக்கம். கடந்த ஞாயிற்றுக்கி ழமை கடைக்கு விடுமுறை அளிக்கப்ப ட்டு இருந்தது.

இந்நிலை யில் நேற்று காலை வழக்கம் போல் கடையை திறக்க சுதா–கர் வந்தார். அப்போது கடை யின் பூட்டு உடை க்கப்ப ட்டு இருப்ப தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது லாக்கரில் இருந்த ரூ.15 ஆயிரம் பணம் திருட்டுப் போய் இருந்தது தெரிய வந்தது. கடையில் மற்ற பொருட்கள் எதுவும் திருட்டு போக வில்லை.

இது குறித்து சுதாகர் வீரப்பன் சத்திரம் போலீ சாருக்கு தகவல் தெரி வித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொ–ண்டனர்.

இதில் ஞாயிற்றுக்கிழமை இரவில் மர்பு நபர்கள் கடைக்குள் நுழைந்து பணத்தை திருடி யது தெரிய வந்தது.

இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடையில் பொருத்த ப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் ஆய்வு செய்து அதன் அடிப்படை யில் விசாரணை மேற்கொண்டு வருகின்ற–னர்.

Tags:    

Similar News