உள்ளூர் செய்திகள்

இளம்பெண் மாயம்

Published On 2022-07-19 08:20 GMT   |   Update On 2022-07-19 08:20 GMT
  • கோபிசெட்டிபாளையம் அருகே கணவன் மனைவியை திட்டியதால் மனைவி கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவல்லை.
  • இது குறித்து கணவர் சிறுவலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோபி:

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பெரிய கொரவம் பாளையம் நடராஜபுரம் காலனி பகுதியை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மனைவி ரத்தினாள் (34). இவர் விவசாய கூலி தொழிலாளி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்னர்.

இந்த நிலையில் ரதினால் வேலைக்கு சென்று விட்டு வந்து சரியாக வீட்டு வேலை செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனைவியை கணவன் கண்டித்து வந்தார்.

இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

தொடர்ந்து தங்கராஜ், ரதினாலை திட்டினார். இதனால் ரத்தினாள் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவல்லை.

அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை. இது குறித்து தங்கராஜ் சிறுவலூர் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News