குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி: சுற்றுலாப் பயணிகள்- ஐயப்ப பக்தர்கள் உற்சாக குளியல்
- இரவு முதல் இன்று காலை வரை மழைப்பொழிவு முற்றிலும் குறைந்துள்ளதால் தண்ணீர் வரத்தும் அருவிக்கு சீரானது.
- இன்று காலையில் மழைப்பொழிவு முற்றிலும் குறைந்து வெயில் முகம் காட்ட தொடங்கியது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் முழுவதும் நேற்று காலை முதல் மாலை வரையில் பரவலாக மழை பெய்தது. இதனால் குற்றால அருவிகளான ஐந்தருவி, மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இரவு முதல் இன்று காலை வரை மழைப்பொழிவு முற்றிலும் குறைந்துள்ளதால் தண்ணீர் வரத்தும் அருவிக்கு சீரானது. இதனால் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இன்று காலையில் குற்றாலம் மெயின் அருவியில் ஆர்ப்பரித்து விழுந்த தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
மேலும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் குற்றாலத்தில் அதிகரித்து காணப்படுவதால் போலீசார் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இன்று காலையில் மழைப்பொழிவு முற்றிலும் குறைந்து வெயில் முகம் காட்ட தொடங்கியது.