உள்ளூர் செய்திகள்
- சித்தோடு நடுப்பாளையத்தை மணிகண்டன் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
- இதனையடுத்து போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.
பவானி:
பவானி அருகே உள்ள சித்தோடு நடுப்பாளையம் மாரியம்மன் கோவில் அருகில் சித்தோடு சப்-இன்ஸ்பெக்டர் குகனேஸ்வரன் மற்றும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது அவர் சித்தோடு நடுப்பாளையம் மணிகண்டன் (42) என்பதும், செல்போனில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் பரிசு விழும் எனக் கூறி எண்கள் அனுப்பியும், வெள்ளை தாள்களில் எண்கள் எழுதி விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.