search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "who sold lottery tickets"

    • லாட்டரி சீட்டு விற்ற மதன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    • லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர்-ஆப்பக்கூடல் ரோடு பிரம்மதேசம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக அந்தியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த அந்தியூர் அருகே பிரம்மதேசம் சின்னக்குளம் பகுதியை சேர்ந்த சென்னி மகன் மதன் (வயது 66) என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • பெட்டிக்கடையில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து ரங்கசாமியை கைது செய்தனர்.

    ஈரோடு:

    சத்தியமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது சத்தியமங்கலம் வரதம்பாளையம் அருகே உள்ள தியேட்டர் பக்கத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் அந்த பெட்டிக்கடை யை ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அந்த பெட்டி கடையில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்றது தெரியவந்தது.

    இது குறித்து விசாரித்த போது சத்தியமங்கலம் பண்ணாரி யம்மன் நகரை சேர்ந்த ரங்கசாமி (75) என்பவர் அந்த பெட்டி க்கடை யை நடத்தி வந்தது தெரிய வந்தது.

    10 லாட்டரி சீட்டு களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ரங்கசாமி இடமிருந்து ரூ.17, 950 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து ரங்கசாமியை கைது செய்தனர்.

    • சித்தோடு நடுப்பாளையத்தை மணிகண்டன் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
    • இதனையடுத்து போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.

     பவானி:

    பவானி அருகே உள்ள சித்தோடு நடுப்பாளையம் மாரியம்மன் கோவில் அருகில் சித்தோடு சப்-இன்ஸ்பெக்டர் குகனேஸ்வரன் மற்றும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.

    அப்போது சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது அவர் சித்தோடு நடுப்பாளையம் மணிகண்டன் (42) என்பதும், செல்போனில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் பரிசு விழும் எனக் கூறி எண்கள் அனுப்பியும், வெள்ளை தாள்களில் எண்கள் எழுதி விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.

    ×