என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Case against old man"

    • முத்துசாமி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • அவர் வைத்திருந்த 7 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் ராக்கம்மாபுதூர் அருகே அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பதாக அறச்சலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த அறச்சலூர் இலவந்தம் பகுதியை சேர்ந்த முத்துசாமி என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பின்னர் அவர் வைத்திருந்த 7 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

    • லாட்டரி சீட்டு விற்ற மதன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    • லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர்-ஆப்பக்கூடல் ரோடு பிரம்மதேசம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக அந்தியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த அந்தியூர் அருகே பிரம்மதேசம் சின்னக்குளம் பகுதியை சேர்ந்த சென்னி மகன் மதன் (வயது 66) என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ×