உள்ளூர் செய்திகள்
புகையிலை விற்றவர் மீது வழக்கு பதிவு
- கடையில் புகையிலை பொருட்கள் விற்பதாக மலையம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- போலீசார் தினேஷ் கிரி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொடுமுடி:
கொடுமுடி அருகே கணபதிபாளையத்தில் ராஜஸ்தானை சேர்ந்த தினேஷ் கிரி என்கிற சேட்டு டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
இவரது கடையில் புகையிலை பொருட்கள் விற்பதாக மலையம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் நேரில் சென்று ஆய்வு செய்தபோது டீக்கடையில் புகையிலை பொருட்களை இருந்தது தெரியவந்தது.
பின்னர் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் தினேஷ் கிரி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.