உள்ளூர் செய்திகள்

கலெக்டர் சாருஸ்ரீ.

தமிழ்நாடு சுற்றுலா விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

Published On 2023-08-09 09:54 GMT   |   Update On 2023-08-09 09:54 GMT
  • சுற்றுலா தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்க உள்ளது.
  • 17 வகையான விருதுகள் உலக சுற்றுலா தினத்தன்று வழங்கப்பட உள்ளது.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு சுற்றுலாத்துறை, உலக சுற்றுலா தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் பல்வேறு சுற்றுலா தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்க உள்ளது.

அதன்படி, பல்வேறு சுற்றுலா ஆபரேட்டர்கள், விமான நிறுவனங்கள், ஓட்டல்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் மாநிலத்தின் சுற்றுலாவை மேம்படுத்துவதில் சாதகமாக விளங்கும் பிற சுற்றுலா நிறுவனங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படும்.

எனவே, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தொழில் முனைவோரும் உரிய தமிழ்நாடு சுற்றுலா விருது பெற விண்ணப்பிக்கலாம். சிறந்த டூர் ஆப்ரேட்டர், சிறந்த உள்நாட்டு டூர் ஆப்ரேட்டர், சிறந்த பயண பங்குதாரர், சிறந்த விமான கூட்டாளர், சிறந்த தங்குமிடம் என 17 வகையான விருதுகள் உலக சுற்றுலா தினமான செப்டம்பர் 27-ந் தேதி சென்னையில் வழங்கப்பட உள்ளது. அதற்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து வருகிற 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு சுற்றுலா அலுவலருக்கு 89251 58497 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News