உள்ளூர் செய்திகள்

அம்பை வட்டாரத்தில் தொடர் மழையினால் நெற்பயிர் நீரில் மூழ்கி பாதிப்பு

Published On 2023-11-20 09:11 GMT   |   Update On 2023-11-20 09:11 GMT
  • மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணகுமார் பார்வையிட்டார்.
  • விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள துணை வேளாண்மை விரிவாக்க மையத்தையும் கிருஷ்ணகுமார் ஆய்வு செய்தார்.

அம்பை:

அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் தொடர் மழையின் காரணமாக நெற்பயிர் நீரில் மூழ்கி பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

அவ்வாறு பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணகுமார் பார்வை யிட்டார். குறிப்பாக ஆலடியூர்-2 கிராமத்தில் சமீபத்தில் பெய்த மழை யினால் சாய்ந்த நெல் வயல்களை பார்வையிட்டார்.

அங்கு இருந்த விவசாயிகளிடம் பாதிப்பு குறித்த விபரங்கள் கேட்டறிந்தார். உடன் அம்பாசமுத்திரம் வேளாண்மை உதவி இயக்குநர் கற்பகராஜ்குமார், வேளாண்மை துணை வேளாண்மை அலுவலர் திவான் பக்கீர் முகைதீன், உதவி வேளாண்மை அலுவ லர் சாமிராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் திருமலைக்குமார், இசக்கி முத்து, கிராம உதவியாளர் ரபீக் மற்றும் அப்பகுதி விவசாயிகள் உடனிருந்தனர். வேளாண் மைத்துறை மற்றும் வருவாய்துறை அலுவலர்களை பாதிப்பு குறித்து விவசாயிகள் வாரி யாக கணக்கெடுக்க உத்தரவிட்டார்.

மேலும் அவர் விக்கிரமசிங்க புரத்தில் உள்ள துணை வேளா ண்மை விரிவாக்க மையத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து விதைகள் விநியோகம் மற்றும் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்ட கலெக்டரின் உத்தரவுப்படி அம்பாசமுத்திரத்தில் உள்ள சில்லரை உரவிற்பனை கடையினை திடீர் ஆய்வு மேற்கொண்டார். உரங்கள் விற்பனை மற்றும் இருப் பினை ஆய்வு செய்தார். இருப்பு வித்தியாசம் இருந்த உரக்கடைக்கு விற்பனை தடை விதிக்கப் பட்டது.

ஆய்வின் போது வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் வேளாண்மை அலு வலர் ஷாஹித் முகையதீன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News