உள்ளூர் செய்திகள்
புவனகிரி அரசு பள்ளியில் போதை பொருள் விழிப்புணர்வு முகாம்
- அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
- சிதம்பரம் டி.எஸ்.பி. ரமேஷ்ராஜ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
கடலூர்:
புவனகிரியில் சிதம்பரம் விருத்தாச்சலம் சாலையில் அமைந்துள்ளது அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி. இந்தப் பள்ளியில் சுமார் ஆயிரம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு போதை பொருள் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் சிதம்பரம் டி.எஸ்.பி. ரமேஷ்ராஜ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.இதில் புவனகிரி இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ், பள்ளி தலைமை ஆசிரியர்ரவி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.