உள்ளூர் செய்திகள்

பூத் கமிட்டி விண்ணப்பங்களை மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா வழங்கிய போது எடுத்த படம்.

அ.தி.மு.க சார்பில் பூத் கமிட்டி விண்ணப்பங்கள் வினியோகம்

Published On 2023-04-09 15:03 IST   |   Update On 2023-04-09 15:03:00 IST
  • அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி அமைக்க விண்ணப்பங்கள் வினியோகம் செய்யும் பணி இன்று நடைபெற்றது.
  • நிகழ்ச்சியில் நெல்லை தொகுதி பொறுப்பாளர்கள் கல்லூர் வேலாயுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை:

நெல்லை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அ.தி.மு.க சார்பில் பூத் கமிட்டி அமைக்க விண்ணப்பங்கள் வினியோகம் செய்யும் பணி இன்று நடைபெற்றது.

வண்ணார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத் தலைவர் பரணி சங்கரலிங்கம் தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா, அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன் ஆகியோர் விண்ணப்பங்களை பகுதி செயலாளர் மற்றும் ஒன்றிய செயலாளர்களிடம் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் நெல்லை தொகுதி பொறுப்பாளர்கள் கல்லூர் வேலாயுதம், பொதுக்குழு உறுப்பினர் கங்கை வசந்தி, பகுதி செயலாளர் காந்தி வெங்கடா சலம் ஒன்றிய செயலாளர்கள் மருதூர் ராமசுப்பிரமணியன், லெட்சுமண பெருமாள், சங்க நகர் பேரூர் செயலாளர் சங்கர்,

நாரணம்மாள்புரம் பேரூர் செயலாளர் செல்ல பாண்டியன், கவுன்சிலர் சந்திரசேகர், டவுன் கூட்டுறவு சங்க தலைவர் பால்கண்ணன், இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட தலைவர் ஆறுமுகம் என்ற கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News