உள்ளூர் செய்திகள்

அனைத்து பணியாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பங்கேற்று பேசினார்.

மகளிர் குழுவினருக்கு கடன் வழங்குவது தொடர்பான கலந்துரையாடல்- கலெக்டர் பங்கேற்பு

Published On 2022-09-17 10:25 GMT   |   Update On 2022-09-17 10:25 GMT
  • கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து பணியாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
  • மகளிர் சுய உதவி குழுவினருக்கு வங்கிகள் நேரடி கடன் வழங்குவது தொடர்பாக கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

தஞ்சாவூர்:

தஞ்சை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து பணியாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில் மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு வங்கிகள் நேரடி கடன் வழங்குவது தொடர்பாக மாவட்ட அளவிலான வங்கியாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. இதில் கூடுதல் கலெக்டர் (வருவாய் ) சுகபுத்ரா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மகளிர் திட்ட இயக்குனர் லோகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News