உள்ளூர் செய்திகள்

மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

ரூ.1.60 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்

Published On 2023-07-03 09:27 GMT   |   Update On 2023-07-03 09:27 GMT
  • 1.60 கோடி மதிப்பில் பணிகளை கோட்டை வாசல், பழைய பஸ் நிலையம், அஞ்செட்டி சாலை சந்திப்பு ஆகிய மூன்று இடங்களில் பூமி பூஜை நடந்தது.
  • மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக் கோட்டை பேரூராட்சியில் 1-வது, 2-வது வார்டில் தார்சாலை மற்றும் சிமெண்ட் சாலை, பேவர் பிளாக் அமைத்தல் பழைய பஸ் நிலையத்தில் தார் சாலை மற்றும் புதிய பேருந்து நிலையத்தை பழுது பார்த்தல், ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் பைப்லைன் மற்றும் வார்டுகளில் பேவர் பிளாக் அமைத்தல் உள்ளிட்ட 1.60 கோடி மதிப்பில் பணிகளை கோட்டை வாசல், பழைய பஸ் நிலையம், அஞ்செட்டி சாலை சந்திப்பு ஆகிய மூன்று இடங்களில் பூமி பூஜை நடந்தது.

நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். பேரூராட்சி துணைத்தலைவர் அப்துல்கலாம், அவைத்தலைவர் சீனிவாசன். துணை செயலாளர்கள் இனாயத்துல்லா, பொருளாளர் வெங்கடேஷ், மாவட்ட பிரிதிநிதி சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், முன்னாள் அவைத்தலைவர் வெங்கடசாமி, வார்டு கவுன்சிலர்கள் நாகரத்தினா. சுமதி சார்லஸ், மணி வண்ணன், லிங்கோஜிராவ் ஸ்ரீதர் கட்சி நிர்வாகிகள் முஜாமில்பாஷா, சென்னீரா, சேகர், சல்மான், மஞ்சு, பார்திபன், நாகராஜ். ஜேசப், ரமேஷ்,கோபல், ராமன், அசேன், சித்திக், சந்தோஷ் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News