உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம்

Published On 2023-09-01 14:31 IST   |   Update On 2023-09-01 14:31:00 IST
  • ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
  • மணிப்பூர் இனப்படுகொலை, அரியானா கலவரம் ஆகியவற்றை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்

அரவேணு,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மார்க்கெட் திடலில் மக்கள் அதிகாரம் மற்றும் முற்போக்கு மக்கள் மேடை அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதில் அந்த அமைப்புகளின் நிர்வாகிகள் வெங்கட், ரவி, ரத்ததான நண்பர்கள் குழுவின் செல்வம், இந்திய பொதுவுடமை கட்சி (மார்க்சிஸ்ட்) மணி, தந்தை பெரியார் திராவிட கழகம் ஜெயக்குமார், மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ் மற்றும் ராஜா உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கோத்தகிரியில் மழை கொட்டியபோதும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மணிப்பூர் இனப்படுகொலை, அரியானா கலவரம் ஆகியவற்றை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News