கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் கூட்டம் நடைபெற்றதையும், அதில் கலந்து கொண்ட விவசாயிகளையும் படத்தில் காணலாம்.
வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்- விவசாயிகள் கோரிக்கை
- நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்து விட்டதால் வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
- ரேஷன் கடைகளில் ஒரு நபருக்கு 10 கிலோ ரேஷன் அரிசி வழங்க வேண்டும்
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று வாராந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் நடை பெற்றது.
கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் அசோக், நேர்முக உதவியாளர் வேளாண்மை கிருஷ்ணகுமார், கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலங்கள்) ஷேக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை
தொடர்ந்து விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை வலியுறுத்தி பேசினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் பெரும்ப டையார் கூறுகையில், நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்து விட்டதால் வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 நஷ்ட ஈடாக வழங்க வேண்டும்.
விவசாய தொழிலா ளர்கள் குடும்பங்களுக்கு மாதம் தோறும் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு ரேஷன் கடைகளில் ஒரு நபருக்கு 5 கிலோ என்ற வீதத்தில் ரேஷன் அரிசி வழங்கப்படு கிறது. அதனை 10 கிலோவாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கூறினார்.
கொப்பரை தேங்காய்
தொடர்ந்து பேசிய மற்றொரு விவசாயி, மானூரில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்வதற்கு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று கூறினார்.
அதற்கு விரைவில் ராமையன்பட்டியை முதன்மை கொள்முதல் நிலையமாக கொண்டு கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய நடவடி க்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரி வித்தனர்.
குளங்களில் மண் அள்ளு வது வியாபாரமாக மாற்றி வருகின்றனர் என்று வியாபாரிகள் புகார் தெரி வித்தனர்.
அதற்கு பதில் அளித்த கலெக்டர் கார்த்திகேயன், பொதுப்பணித்துறை அல்லது ஊரக வளர்ச்சி துறை சார்ந்த அதிகாரிகள் முன்னிலையில் மட்டுமே விவசாயிகளுக்கு மட்டுமே வண்டல் மண் வழங்க வேண்டும். அதனை மீறி ஏதேனும் தவறு நடந்தால் ஆதாரத்துடன் கண்டு பிடிக்கப்பட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட வர்கள் ஜெயிலில் அடைக் கப்படுவார்கள் என்று கூறினார்.
இந்த காரசார விவாதத்தின் போது எழுந்த விவசாயி ஒருவர், வேளாண்துறை அதிகாரிகள் பெரும்பாலானோர் பணி களை சரியாக செய்வது இல்லை. 4 அதிகாரிகளை 'சஸ்பெண்டு' செய்தால் தான் ஒழுங்காக வேலை செய்வார்கள் என்று ஆதங்க த்துடன் தெரிவித்தார்.
தொடர்ந்து கலெக்டர் கார்த்திகேயன் கூட்டத்தில் பேசியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் ஜூன் மாதத்தில் 1.70 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. ஜூலை மாதத்தில் இது வரையில் 21.60 மில்லி மீட்டர் மழை கிடைத்துள்ளது. வழக்கமான மழையளவை விட இது 18.18 சதவிகிதம் குறைவாகும். இதனால் ஏற்பட்டுள்ள பயிர் சாகுபடி குறைவு குறித்த விரிவான விபரம் அரசுக்கு தெரிவிக் கப்பட்டுள்ளது.
பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர் தேக்கங்களில் இருந்து தாமிரபரணி பாசனத்தில் உள்ள வடக்கு கோடை மேலழகியான், தெற்கு கோடைமேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய் மற்றும் கன்னடி யன் கால்வாய் ஆகிய நான்கு கால்வாய்களின் கீழ் பயன்பெறும் நேரடி மற்றும் மறைமுக பாசனப் பரப்பு களான 18 ஆயிரத்து 90 ஏக்கர் நிலங் களுக்கு கார் பருவ சாகு படிக்கும் குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கும் தண்ணீர் திறந்து விடப் பட்டுள்ளது.
இதுவரையில் 106.64 மெட்ரிக் டன் நெல் விதை விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. மேலும், 150 மெட்ரிக் டன் நெல் விதை கள் வேளாண்மை விரி வாக்க மையத்தில் இருப்பு உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் நடப்பு மாதம் வரை 1085 ஹெக்டேர் பரப்பில் கோடை நெல் சாகுபடியும், 293 ஹெக்டர் பரப்பில் கார் நெல் சாகுபடியும் செய்யப் பட்டுள்ளது. இதைத்தவிர சோளம், கம்பு ஆகிய சிறு தானியம் 208 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப் பட்டுள்ளது.
ஜூன் 2023-ம் மாதத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்ட த்தில் மொத்தம் 131 மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. இவற்றுள் வேளா ண்மை சார்ந்த மனுக்கள் 76, வேளாண்மை சாராத மனுக்கள் 55 பெறப் பட்டு, மனுக்களுக்குரிய பதில்கள் விவசாயிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.