தமிழ்நாடு செய்திகள்

புதுமைப்பெண் திட்டத்தால் பெண்கள் மேற்படிப்பு படிக்கும் எண்ணிக்கை உயர்ந்துள்ளது - மு.க.ஸ்டாலின்

Published On 2026-02-10 11:55 IST   |   Update On 2026-02-10 12:01:00 IST
  • நானும் MCC பள்ளியின் பழைய மாணவன் தான்.
  • மருத்துவக்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு என்பது நாம் போராடிப்பெற்ற உரிமை.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மகளிர் கிறிஸ்துவக் கல்லூரியில் நடைபெறும் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* என் மீது நீங்கள் வைத்துள்ள அன்பின் வெளிப்பாடாகத்தான் இந்த நிகழ்ச்சியை பார்க்கிறேன்.

* நானும் MCC பள்ளியின் பழைய மாணவன் தான்.

* மீண்டும் தி.மு.க. ஆட்சி தான் அமையும். நீங்கள் வைத்த அனைத்து கோரிக்கைகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும்.

* தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் தேர்தல் பிரசாரம் போல் உள்ளது இந்த பாராட்டு விழா.

* கிராமப்புறங்களில் பள்ளி முடித்து மேற்படிப்பு படிக்க முடியாத சூழல் இருந்தது. இதனை புதுமைப்பெண் திட்டம் மாற்றியது.

* புதுமைப்பெண் திட்டத்தால் பெண்கள் மேற்படிப்பு படிக்கும் எண்ணிக்கை 34 சதவீதமாக உயர்ந்துள்ளது.

* மருத்துவக்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு என்பது நாம் போராடிப்பெற்ற உரிமை.

* அரசு பள்ளி மாணவர்களுக்கு பொறியியல், விவசாயம், கால்நடை படிப்புகளிலும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

* சிறுபான்மையினருக்கான எஞ்சியுள்ள கோரிக்கைகளையும் விரைவில் நிறைவேற்றி தருவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News