தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் ஆட்டோ, கால்டாக்சி டிரைவர்கள் வேலை நிறுத்தம்

Published On 2026-02-10 11:01 IST   |   Update On 2026-02-10 11:01:00 IST
  • 2013-ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மாற்றி அமைக்காமல் இருப்பது வேதனையானது.
  • கட்டணத்தை மாற்றி புதிய கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்.

சென்னை:

தமிழ்நாடு ஆட்டோ-கால் டாக்சி ஓட்டுனர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்த போராட்டம் இன்று நடைபெற்றது.

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும், டூரிஸ்ட் கேப் , மேக்ஸி கேப் வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவியை அரசு செலவில் பொருத்த வேண்டும், ஓலா, உபர், ராபிடோ, போர்ட்டர் போன்ற வாகனங்களை அக்ரிகேட்டர் சட்டத்தின் கீழ் முறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடந்தது.

சென்னையில் 30 ஆயிரம் பேர் இந்த வேலை நிறுத்தத் தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கூட்டமைப்பு சங்கங்களின் தலைவர் ஜாகிர் உசேன் கூறியதாவது:-

13 ஆண்டுகளாக மீட்டர் கட்டணத்தை உயர்த்தாமல் அரசு கிடப்பில் போட்டுள்ளது. இதனால் ஆட்டோ தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 2013-ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மாற்றி அமைக்காமல் இருப்பது வேதனையானது.

எனவே கட்டணத்தை மாற்றி புதிய கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள வாகனங்களை முறைப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் பிரதான கோரிக்கையாகும்.

இவற்றை உடனடியாக இந்த அரசு செய்ய வேண்டும் என வலியுறுத்தி பொது வேலை நிறுத்தம் நடக்கிறது. மாலை 4 மணி அளவில் கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொள்கிறார்கள் என்றார். 

Tags:    

Similar News