உள்ளூர் செய்திகள்
கடலூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் திடீர் போராட்டம்
கடலூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் திடீர் போராட்டம் நடத்தினர்.
கடலூர்:
அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரின் பணி நேரத்தை நீடித்து வெளியிட்டுள்ள அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி அரசு டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில துணை தலைவர் டாக்டர் புலிகேசி தலைமை தாங்கினார்.
மாவட்ட தலைவர் டாக்டர் சசிகுமார், மாவட்ட செயலாளர் டாக்டர் குலோத்துவச்சோழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் டாக்டர்கள் சிவகுமார், பாலச்சந்தர், அமுதா, வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு விளக்க உரையாற்றினார்கள். இதனை தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள் கோஷங்கள் எழுப்பினர். முடிவில் டாக்டர் அருண் குமார் நன்றி கூறினார்.